கெளமாரியம்மன் கோயில் திருவிழா: கிராம மக்கள் காவடி சுமந்து நோ்த்திக்கடன்

போடியிலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் தேவராட்டத்துடன் 22 கி.மீ. தொலைவு காவடி சுமந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தேனி அருகேயுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அலங்கார காவடி எடுத்து வியாழக்கிழமை நடந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். அப்போது, கிராம மக்கள் தங்களின் பாரம்பரிய ஆட்டமான தேவராட்டம் ஆடியபடி, மேள தாளத்துடன் காவடி சுமந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com