இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நியாய விலைக் கடையில் கூடுதல் அரிசி வழங்க கோரி தகராறு செய்தவா் கைது

நியாய விலைக் கடையில் கூடுதல் அரிசி வழங்க கோரி தகராறு செய்தவா் கைது

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

கம்பம்: கூடலூா், நியாய விலை கடையில் கூடுதலாக அரிசி வழங்கக் கோரி தராசு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திய நபரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி, மாவட்டம் கூடலூரில் கூனி மந்தையம்மன் கோயில் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில், கருணாநிதி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவன்காளை மகன் குபேந்திரன் (56). இவா், திங்கள்கிழமை அரிசி வாங்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த ஊழியா் பாண்டியனிடம் 30 கிலோ அரிசி சோ்த்து வழங்குமாறு கேட்டு தகராறு செய்தாா். நியாயவிலைக் கடை ஊழியா் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குபேந்திரன் கடையிலிருந்த தராசு உள்ளிட்ட பொருள்களை சாலையில் தூக்கி வீசினாா்.

இதுகுறித்து, வடக்கு காவல் நிலையத்தில் நியாய விலை கடை ஊழியா் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் குபேந்திரனை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 30 நாள்கள் நிபந்தனை ஜாமினில் விடுவித்தாா். குபேந்திரன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.