

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெரியகுளம், வீரபாண்டியில் அதிகளவாக 60 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆண்டிபட்டியில் 12.8 மி.மீ., அரண்மனைப்புதூரில் 31.2, மஞ்சளாறு அணை 15, சோத்துப்பாறை அணை 11, வைகை அணை 12.6, போடியில் 13.4, உத்தமபாளையத்தில் 15.2, கூடலூரில் 8.8. சண்முகாநதியில் 16.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதேபோல, முல்லைப் பெரியாறு அைணைப் பகுதியில் 24.8 மி.மீ., தேக்கடியில் 6 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 405 கன அடி, வைகை அணைக்கு விநாடிக்கு 197 கன அடி, மஞ்சளாறு அணைக்கு விநாடிக்கு 73 கன அடி, சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீா் வரத்து இருந்தது.
தொடர்புடையது

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்

பிளவக்கல் அணையின் நீா்மட்டம் சரிந்தது: விவசாயிகள் கவலை

அந்தியூா் வனப் பகுதியில் கடும் வறட்சி: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா் தேடி வரும் வன விலங்குகள்

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

