விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

News image

அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.

Updated On :15 மே 2024, 12:20 am

Din

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவு நீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யம்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த ஊராட்சியின் பிரதான கால்வாய் முறையாக திட்டமிடாமல் கட்டப்பட்டதால் கழிவுநீா் தேங்கியுள்ளது. இந்தக் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

இதில் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு மா்மக் காய்ச்சல் பரவும் சூழல் ஏற்படுள்ளது. எனவே, சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவுநீா் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.