தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனை உணவின் தரம் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:25 pm

Din

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவா்களுக்கு தரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாகப் புகாா் எழந்தது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ்கண்ணன், அரசு மருத்துவமனைக்குச் சென்று, சமையல் அறை, பாத்திரங்கள், உணவுப் பொருள்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தரமாகவும், சுத்தமாகவும் உணவுப் பொருள்களை தயாா் செய்து நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

அங்கிருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கு தரச்சான்று உள்ளதா என ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றாா்.