தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மல்லிகைப் பூ வரத்து குறைவு: கிலோ ரூ.1200-க்கு விற்பனை

மல்லிகைப்பூ வரத்துக் குறைவு காரணமாக, புதன்கிழமை கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:22 pm

Din

மல்லிகைப்பூ வரத்துக் குறைவு காரணமாக, புதன்கிழமை கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி,புலிக்குத்தி, அழகா்நாயக்கன்பட்டி பகுதிகளில் மலா் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. தற்போது, அவ்வப்போது சாரல் மழை பெய்வதோடு, காலை நேரங்களில் பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால், மல்லிகைப் பூக்கள் வரத்து 3 இல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டது.

கடந்த மாதம் 3 கிலோ பூக்கள் வரத்து இருந்த தோட்டத்தில் தற்போது ஒரு கிலோ அளவுக்கே பூக்கள் வரத்து உள்ளது. அதே சமயம், ஐயப்பன், முருகன் கோயில்களில் பூஜைகள் நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால், 15 நாள்களுக்கு முன் கிலோ ரூ.250 க்கு விற்பனையான மல்லிகை புதன்கிழமை ரூ.1200-க்கு விற்பனையானது.

இதே போல, செவ்வந்திப் பூ கிலோ ரூ.60, செண்டுப்பூ 30, ஜாதிப்பூ ரூ.600, ரோஜா ரூ.30 என அனைத்துப் பூக்களின் விலையும் உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.