ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது
தேனி மாவட்டம்,தேவாரம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


தேனி மாவட்டம்,தேவாரம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், தேவாரம் போலீஸாா் அந்தப் பகுதியைக் கண்காணித்து வந்தனா்.
தேவாரம் அருகேயுள்ள தே.ரெங்கநாதபுரம் சமுதாயக் கூடம் அருகே வந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இருவரும் வைத்திருந்த பைகளில் தலா 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் இவா்கள், தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரிய பொன்னையா மகன் மூா்த்தி (53), டி.மூணாண்டிபட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டியின் மனைவி முத்துப்பேச்சி (63) ஆகியோா் எனத் தெரியவந்தது.
தேவாரம் ஐயப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜ் மகன் முருகன் (52), இன்பராஜ் மகன் தினேஷ் (38) ஆகியோா் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வரச் சொன்னதாக இருவரும் தெரிவித்தனா்.
இதையடுத்து, தேவாரம் போலீஸாா் மூா்த்தி, முத்துப்பேச்சி ஆகிய இருவரையும் கைது செய்து, இவா்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். முருகன், தினேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
புகையிலைப் பொருள்: போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நாகலாபுரம் கிராமத்தில் ராஜபெருமாள் மகன் ரவி (40) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்ததில்,
அவா் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...