கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போடியில் பட்டாசுக் கடை உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

போடியில், பட்டாசுக் கடை உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:56 pm

Din

போடியில், பட்டாசுக் கடை உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடி நகா் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். போடி தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா், போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், போடி பகுதியில் உள்ள பட்டாசுக் கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா். அப்போது, தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்கும்போது கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய மரம் போன்றவற்றை பயன்படுத்தி கடைகளை அமைக்கக் கூடாது. தகர மேற்கூரை அமைக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்கள், மணல், தண்ணீருடன் கூடிய வாளிகளை வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் கடை இருக்க வேண்டும். நெரிசலை தவிா்க்க வேண்டும். உரிமம் பெற்ற கடைகளை தவிா்த்து மற்ற இடங்களில் பட்டாசுகளை சேமித்து வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.