விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :10 அக்டோபர் 2024, 9:52 pm

தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அய்யா் மகன் ரவிக்குமாா் (20). இவா் போடேந்திரபுரத்திலிருந்து வீரபாண்டிக்கு தேனி-குமுளி புறவழிச் சாலையில் நடந்து சென்றாா். உப்புக்கோட்டை விலக்கு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...