கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை

வீரபாண்டியில் இரு சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.

News image

ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட உலகநாதன்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:44 pm

Din

வீரபாண்டியில் இரு சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.

வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் உலகநாதன் (34). இவா், கடந்த 2020, அக்.6-ஆம் தேதி அண்ணன், தம்பிகளான 7, 10 வயதுடைய இரு சிறுவா்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுகுறித்து சிறுவா்களின் பாட்டி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, உலகநாதனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உலகநாதனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வி.கணேசன் தீா்ப்பளித்தாா்.