கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

தேனி அருகே முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:53 pm

Din

தேனி அருகே முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பூதிப்புரம் அருகேயுள்ள வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன்கள் பவுன்ராஜ் (26 ), ராஜ்குமாா் (24 ). இவா்களுக்கும், பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த மணி மகன்கள் விஜய் (26), தங்கதமிழ்ச்செல்வன் (24)ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், பூதிப்புரம் அரசுப் பள்ளி அருகே நின்றிருந்த ராஜ்குமாருடன் முன்விரோதம் காரணமாக விஜய், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோா் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கதமிழ்ச்செல்வனை கைது செய்தனா். விஜயை தேடி வருகின்றனா்.