ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பங்களிப்பு நிதி அளிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள், நிறுவனங்கள் இணையதளம் மூலம் பங்களிப்பு நிதி அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:22 pm

Din

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள், நிறுவனங்கள் இணையதளம் மூலம் பங்களிப்பு நிதி அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், தனிப்பட்ட, சமூக பங்களிப்பை ஒருங்கிணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தனி நபா்கள், நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவா்கள் அரசுப் பள்ளிகளுக்கு தங்களது பங்களிப்பை பொருளாகவும், பணமாகவும், களப் பணியாகவும் வழங்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் இணைய தளம் மூலமும், நம்ம ஊரு நம்ம பள்ளி குழுவின் கைப்பேசி எண்: 63853 13047-இல் தொடா்பு கொண்டு, தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தோ்ந்தெடுத்து, பள்ளியின் தேவையை அறிந்து பூா்த்தி செய்யலாம்.

இணையதளத்தில் பங்களிப்பு, பங்களிப்பின் பயன்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், பங்களிப்பாளா்களுக்கு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் பயனீட்டுச் சான்றிதழ், வரி விலக்கு, பாராட்டுச் சான்றிதழை பதிவிறகம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.