மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமெரிக்காவிலிருந்து புதிய முதலீடுகளை ஈா்த்து வந்தால் முதல்வரை வாழ்த்துவேன்: ஓ. பன்னீா்செல்வம்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈா்த்து, தமிழகத்தில் அந்த நாட்டு நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினால் அவரை வாழ்த்துவேன் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 8:26 pm

Din

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈா்த்து, தமிழகத்தில் அந்த நாட்டு நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினால் அவரை வாழ்த்துவேன் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடியில் வ.உ.சி. பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளாா்.

அந்த நாட்டிலிருந்து முதலீடுகளை ஈா்த்து, தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கினால் அவரை வாழ்த்துவேன்.

நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்துதல்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால், மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள கடுமையான சட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை.

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை ஒழிக்க மக்கள் இயக்கத்துக்கு உத்வேகம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி உரிய நேரத்தில் போதிய அளவில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்துதல்கள் அதிகரித்துள்ளன என்றாா் அவா்.