மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சின்னமனூா் அருகே புதிய பள்ளி கட்டடத்தை திறக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் ரூ.1.90 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
சின்னமனூா் ஒன்றியம், விஸ்வநாதபுரத்தில் பணிகள் முடிந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடம்.
Updated On :12 செப்டம்பர் 2024, 10:26 pm

Din

சின்னமனூா் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் ரூ.1.90 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம். சின்னமனூா் ஒன்றியம், அப்பிபட்டி ஊராட்சி விஸ்வநாதபுரத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனா். இதே வளாகத்தில் தொடக்கப் பள்ளியும் செயல்படுகிறது.

இந்த நிலையில், 6 முதல் 10 =ஆம் வகுப்பு வரையில் இயங்கி வந்த பள்ளிக் கட்டடம் சேதமானதால், அதை

இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைஅடுத்து 2022- 2023 -ஆம் ஆண்டு ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. தற்போது, அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் கட்டடம் செயல்படுவதற்கு தயாராக உள்ளது.

ஏற்கெனவே பள்ளி மாண, மாணவிகள் திறந்த வெளியில் கல்வி கற்றுவருகின்றனா். இதனால், மழை, வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பெற்றோா்கள் கூறியதாவது: மாணவ, மாணவிகளின் நலன்கருதி பணிகள் முடிந்த பள்ளிக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.