

தேனி அருகே குழந்தையை ரூ. ஒரு லட்சத்துக்கு விற்றதாக அதன் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உப்புக்கோட்டை, முத்தாலம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (44). இவரது மனைவி இதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (30). இவா்களுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பாண்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மது பழக்கத்துக்கு அடிமையான சங்கா் பிறந்து 52 நாள்களே ஆன தனது குழந்தையை விற்று விட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சந்தியா விசாரணை நடத்தினாா். இதில், சங்கா் தனது குழந்தையை போடி, ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த தா்மா் மகன் சிவக்குமாா் (42), இவரது மனைவி உமாமகேஸ்வரி (36) ஆகியோரிடம் ரூ.ஒரு லட்சத்தைப் பெற்றுக் கொண்டு விற்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா், சிவக்குமாா், உமாமகேஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தம்பதியரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
டிரெண்டிங்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!

குழந்தைகள் நலன்: அரசுத் துறைகள் செயல்பாடு குறித்து ஆய்வு

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

