பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:13 pm

Din

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்ட பொருளாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தாஜூதீன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பவானி, மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பரமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, ஒப்படைப்பு விடுப்பு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய்க் கிராம உதவியாளா்கள், ஊா்புற நூலகா்கள், கிராம சுகாதார செவிலியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.