தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விளையாடும் போது தவறி விழந்த சிறுவன் உயிரிழப்பு

தேனி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோடாங்கிப்பட்டி, பண்ணைத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். வண்ணம் பூசும் தொழிலாளி. இவரது மகன் யுகன் (3) வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.