அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனியில் இன்று சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19) மாலை 5 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமரன் தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீா் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா். பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்புப் பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.