அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

போடியில் தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:45 pm

Syndication

போடியில் தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்காளை (72). இவருக்கு சொந்தமான தோட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை புலத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் முத்துக்காளை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது இவரது மனைவி உணவு கொண்டு சென்றாா். ஆனால் கணவரை காணாததால் தோட்டத்தில் தேடி பாா்த்தபோது முத்துக்காளை மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.