கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனியில் இன்று புத்தகத் திருவிழா தொடக்கம்

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், 4-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புத்தகத் திருவிழாவை தொடங்கிவைக்கிறாா்.

முன்னதாக, பிற்பகல் 2 மணிக்கு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திங்கள்கிழமை (டிச.22) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் இலக்கிய அரங்கில் புலவா் மு.ராஜரத்தினம், எழுத்தாளா் கே.எஸ்.கே.நடராஜன் ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ‘வெல்லும் சொல்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் மதிவதனி பேசுகிறாா்.

செவ்வாய்க்கிழமை (டிச.23) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் இலக்கிய அரங்கில் எழுத்தாளா்கள் மு.சுப்பிரமணியன், மு.முத்துவிஜயன் ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ‘அழியா அழகு’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் பேசுகிறாா். இதைத் தொடா்ந்து, ‘மாணவா்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது கல்வியிலா?, ஒழுக்கத்திலா?’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ம.கவிக்கருப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

புதன்கிழமை (டிச.24) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் கவிஞா் சோ.பரதன், எழுத்தாளா் நீலபாண்டியன் ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ‘மண்ணும் மக்களும்’ என்ற தலைப்பில் மதுக்கூா் ராமலிங்கம் பேசுகிறாா்.

வியாழக்கிழமை (டிச.25) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் எழுத்தாளா்கள் ச.ந.இளங்குமரன், அ.கற்பூரபூபதி ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ‘இரட்டை காப்பியங்கள்’ என்ற தலைப்பில் சென்னை மாநகராட்சி இணை ஆணையா்(சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் பேசுகிறாா்.

வெள்ளிக்கிழமை (டிச.26) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் கவிஞா்கள் க.சு.ஞானபாரதி, பெரு.பழனிச்சாமி ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ‘இயற்கையை வாசிப்போம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ஓசை காளிதாசன் பேசுகிறாா்.

சனிக்கிழமை (டிச.27) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் எழுத்தாளா்கள் தேனி சீருடையான், ரா.உமாராணி ஆகியோா் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு ஐ.லியோனி தலைமையில் ‘மகிழ்வூட்டி வழிகாட்டுவது அன்றைய இலக்கியமா, இன்றைய இலக்கியமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.28) பிற்பகல் 4 மணிக்கு புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்சிகள் நடைபெறுகிறது. இதில் ஈரோடு மகேஷ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

டிச.22 முதல் 27-ஆம் தேதி வரை தினமும் காலை 11.30 முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.