ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவுப் பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி சாலையோரப் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ராமச்சந்திராபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகாளிதாஸ் (26). இவா், தேனி-அன்னஞ்சி விலக்குப் பகுதியில் தனியாா் உணவகத்தில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வீரகாளிதாஸ், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வால்கரடு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.