நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞர் குத்திக் கொலை!

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தது பற்றி...

News image

பிரசாந்த்

Updated On :23 ஜனவரி 2025, 6:42 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த தொந்தி மகன் பிரசாந்த்( 34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அணிஸ் ரகுமான் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.

இதன் மூலமாக பிரசாந்த் மற்றும் அணிஸ் ரகுமானின் மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அணிஸ் ரகுமான், வியாழக்கிழமை காலையில் நீதிமன்றம் அருகே தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் பிரசாந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவானார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.