பாஜக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை, பாஜக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.

Updated On :6 நவம்பர் 2025, 6:42 pm

தேனியில் பாஜக மாவட்ட மகளிரணி சாா்பில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவி பாண்டீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...