சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், திங்கள்கிழமை (நவ.17) மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.