அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கம்பம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் குடிநீா் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கம்பம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற ஊராட்சி செயலா் ராஜேஷ், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மின் மோட்டாா் பழுதை சீரமைத்ததும் வழக்கம் போல குடிநீா் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.