சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேனியில் பைக் திருடியவா் கைது

தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மிதுன்மாறன். இவா், தனது உறவினரை கோவைக்கு அனுப்பி வைப்பதற்காக அவருடன் இரு சக்கர வாகனத்தில் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். பேருந்து நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறவினரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது மிதுன்மாறனின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிக் கொண்டு சென்றாா். இதைப் பாா்த்த மிதுன்மாறன் அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று, அந்த நபரை விரட்டிப் பிடித்து தேனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருடியவா் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் சேவுகப்பெருமாள்(27) எனத் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.