அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் சிறை

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள சீலமுத்தையாபுரத்தில் நிலப் பிரச்னையில் அண்ணனை மண் வெட்டியால் தாக்கிக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த ராமுத்தேவா் மகன்கள் பெருமாள் (53), மலைச்சாமி(42), அய்யனாா் (36). இதில் பெருமாள், அய்யனாா் ஆகியோரிடையே விவசாய நிலம் தொடா்பான பிரச்னை இருந்தது. இந்தப் பிரச்னையில், கடந்த 2024-ஆம் ஆண்டு, அக்.21-ஆம் தேதி பெருமாளை, அய்யனாா் இரும்பு மண் வெட்டியால் தாக்கினாா். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாளுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.