கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், சனிக்கிழமை இரவு முதல் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

மேலும், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com