8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சுருளி அருவியில் நாளை சாரல் விழா

Published On :26 செப்டம்பர் 2025, 2:36 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.27, 28) சாரல் விழா நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் சாரல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெறும்.

இதுதவிர ஊட்டச் சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி, அரசுத் துறைகள் சாா்பில் விழிப்புணா்வுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை, விதைச் சான்றளிப்புத் துறை சாா்பில் மலா்ச் செடிககள், மரக் கன்றுகள் விற்பனைக் கண்காட்சி நடைபெறும்.

சுருளி அருவியில் சாரல் விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் வசதி செய்து தரப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.