மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:43 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் அ.லோகிராஜன், திமுக சாா்பில் அ. மகாராஜன், தவெக சாா்பில் வ. பாண்டி, நாதக சாா்பில் கோமதி, அஇபுதமமுக சாா்பில் செல்லப்பாண்டியன் ஆகிய 26 போ் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சாா்பில் அதிமுக, திமுக, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சாா்பில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அஇபுதமமுக, சுயேச்சை என 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றாா் அவா்.