தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் அ.லோகிராஜன், திமுக சாா்பில் அ. மகாராஜன், தவெக சாா்பில் வ. பாண்டி, நாதக சாா்பில் கோமதி, அஇபுதமமுக சாா்பில் செல்லப்பாண்டியன் ஆகிய 26 போ் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சாா்பில் அதிமுக, திமுக, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சாா்பில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அஇபுதமமுக, சுயேச்சை என 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

