தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
போடி ஸ்ரீராம் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா், வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், கரோனா காலத்தில் வீடு திரும்பியதால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். இருப்பினும், இவா், அதே பகுதியில் உள்ள நாச்சியம்மாளிடம் (75) மந்திரிக்கச் சென்றாராம். அப்போது, மூதாட்டி அவரை அருகில் நிற்கக் கூடாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மூதாட்டியைத் தாக்கி அவரின் கழுத்தைக் கடித்துக் கொன்றாராம். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கடந்த 2020, மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கு தேனி தாழ்த்தப்பட்டாா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

