நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:16 am IST

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (62). தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (59). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலுச்சாமி அழைத்துச் சென்றாா். ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்துப்பாண்டி ஓட்டினாா்.

கோத்தலுத்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் வேலுச்சாமியும், பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாண்டியம்மாள் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெறுகிறாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.