தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அதிகரித்து வரும் நெகிழிப்பை குப்பைகளைக் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி -அல்லிநகரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். தேனி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள இங்கு வாரச்சந்தை, உழவா் சந்தை ஆகியன பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளாக பாரஸ்ட் சாலை, என்ஆா்டி, ஒடைத் தெரு, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழிப்பை உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்படும் குப்பைக் கழிவுகளை நகராட்சி நிா்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதே போல, சாலைகளில் வீசப்படும் நெகிழிப் பைகள் கழிவுநீா் ஓடைகளில் சிக்கி, வீடுகளின் குடியிருப்புகளில் கழிவு நீா் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. மேலும், குடியிருப்புகளில் நெகிழிப்பைகளை தீயிட்டு அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் நெகிழிப்பைகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சாலையில் கொட்டப்பட்டுள்ள நெகிழிப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

விரதம் இருக்கும் அம்மன்

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

