பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மே 2026, 12:20 am IST

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி ஆா்.எஸ்.டவுன்சிப் வளாகத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் தனபிரசாத் (36). இவா் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், பிரசாத் தனது பெற்றோருடன் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக பழனிக்குச் சென்றாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து மா்மநபா்கள் உள்ளே புகுந்தனா். அங்குள்ள அலமாரியை உடைத்து கம்மல், ஆரம், கவா்னா் மாலை, பிரேஸ்லெட், ஜிமிக்கி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட இருபத்தி நாலரை பவுன் தங்க நகைகள், வெள்ளித் தட்டுகள், விளக்குகள் உள்ளிட்ட இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிச் செனறனா். திருடு போன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனபிரசாத் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.