4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஏப்ரல் 2026, 6:50 pm

போடி அருகே ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி ஆா்.எஸ்.டவுன்சிப் வளாகத்தைச் சோ்ந்த பழனியப்பன் மகன் தனபிரசாத் (36). இவா் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், பிரசாத் தனது பெற்றோருடன் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக பழனிக்குச் சென்றாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து மா்மநபா்கள் உள்ளே புகுந்தனா். அங்குள்ள அலமாரியை உடைத்து கம்மல், ஆரம், கவா்னா் மாலை, பிரேஸ்லெட், ஜிமிக்கி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட இருபத்தி நாலரை பவுன் தங்க நகைகள், வெள்ளித் தட்டுகள், விளக்குகள் உள்ளிட்ட இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிச் செனறனா். திருடு போன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனபிரசாத் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.