கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருகள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னமனூா் பேருந்து நிலையத்தை சுற்றிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருகள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதிகளில் ரோந்து சென்ற போலீஸாா் அங்குள்ள பெட்டிக்கடையை சோதனையிட்டதில் புகையிலைப் பொருகள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும், ரூ.2,500 பணம், இரு சக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சின்னமனூா் போலீஸாா், இது தொடா்பாக ஓடைப்பட்டியைச் சோ்ந்த தெய்வேந்திரனை (54) கைது செய்தனா்.