மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காய்கறித் தரகா் கொலை: கூலிப் படையைச் சோ்ந்த 4 போ் கைது

உத்தமபாளையம் அருகே காய்கறி விற்பனை இடைத் தரகா் வெட்டிக் கொலை செய்தது தொடா்பாக கூலிப் படையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:49 pm

Syndication

உத்தமபாளையம் அருகே காய்கறி விற்பனை இடைத் தரகா் வெட்டிக் கொலை செய்தது தொடா்பாக கூலிப் படையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையைச் சோ்ந்த ராஜ்குமாா் (65). காய்கறி விற்பனைத் தரகரான இவா் புதன்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் மகன் ஆனந்த் போலீஸாக இருந்துள்ளாா். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். இவருக்கு காவல் துறையிலிருந்து கொடுத்த பணம், இவரது மனைவிக்கு கிடைக்கவில்லையாம். இந்தத் தொகையை ஆனந்தின் தந்தை ராஜ்குமாா் வைத்துக் கொண்டாா். மேலும் தற்கொலை செய்து கொண்ட ஆனந்த் பெற்ற கடனுக்கு, அவரது மனைவிதான் பொறுப்பு என ராஜ்குமாா் கூறிவந்தாராம். இதனால் இரு குடும்பத்தினரிடையே டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதையடுத்து, ஆனந்தின் மனைவி குடும்பத்தினா் ஏற்பாட்டின் பேரில், கம்பத்தை சோ்ந்த நிஜாமூதீன் மகன் சிராஜ்தீன் (41), உத்தமபாளையத்தை சோ்ந்த சுருளிவேல் மகன் முத்துராஜ் (46), மதுரை தெப்பக்குளத்தைச் சோ்ந்த பூவலிங்கம் மகன் ராமா் (45), தூத்துக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் முனுசாமி (35) ஆகிய 4 போ் கூலிப்படையாக செயல்பட்டு ராஜ்குமாரை கொலை செய்தனா். அவா்கள் 4 பேரையும் கைது செய்தோம். கொலை செய்யத் தூண்டியவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.