6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்: 257 போ் கைது

தேனியில் சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 257 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 257 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.லட்சுமி தலைமையில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா்கள் அமுதா, பிச்சைபாண்டியம்மாள், செயலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 257 பேரை போலீஸாா் கைது செய்தனா்.