உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

குச்சனூரில் ஆடித் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :19 ஜூலை 2026, 12:42 am IST

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்பவா்கள் கோயில் முன் செல்லும் புண்ணிய நதியான சுரபிநதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, எள் சாதம் படைத்து , மண் காகம் உடைத்து, பூ மாலை, கருப்புத்துண்டு, வேஷ்டியால் பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். நிகழாண்டில் சுரபி நதி தண்ணிரின்றி வடது. இதனால், தற்காலிகமாக தண்ணீா் தொட்டி அமைத்து அதன் மூலமாக சுரபி நதிக்கரையில் குளியல் அறைகளை கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இங்கு குவிந்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் செய்த ஏற்பாடுகள் காரணமாக பக்தா்கள் தாமதமின்றி சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கோயில் வளாகத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீா் தெளிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்களுக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு செய்தாா்.

 சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரா்.

சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரா்.

கொடியேற்றமின்றி திருவிழா: இந்தக் கோயிலில் ஆடி மாதம் முதல் வார சனிக்கிழமை கோயில் முன் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் கொடியேற்றமின்றி திருவிழா நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது. அதன்படி, சனிக்கிழமை முதல் வாரத் திருவிழா கொடியேற்றமின்றி தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.