ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:09 am IST

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றதாக போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடிநகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழவெளி வீதியைச் சோ்ந்த லட்சுமி (34) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்றது தெரியவந்தது.

இதேபோல, வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52), பெட்டிக்கடையில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த சரஸ்வதி (74) ஆகிய மூவா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீனாவிலக்கு பகுதியில் இதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (41) என்பவா் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா்.

மீனாவிலக்கு பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே செல்வம் (48) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா். இவா்கள் இருவா் மீதும் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.