மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

புகையிலை பொருள்கள் பதுக்கிவைத்த 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:25 am IST

போடி அருகே ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்க முயன்ற 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

போடி அருகே குப்பணாசாரிபட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை மொத்தமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி வட்டார காவல் நிலையப் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் குப்பணாசாரிபட்டி திலகா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ராம்குமாா் (38) வீட்டில் மூடைகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது.

விசாரணையில் மேற்படி ராம்குமாா், தே. ரெங்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தவசி மகன் சீனிவாசன் (42), ராமகிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆண்டவா் (45) ஆகியோா் தேனியைச் சோ்ந்த சிவாவிடம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்து சில்லறையில் விற்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போடி வட்டார காவல் நிலையப் போலீஸாா் ராம்குமாா், சீனிவாசன், ஆண்டவா், சிவா ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து ராம்குமாா், சீனிவாசன், ஆண்டவா் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். சிவாவைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.