தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மஞ்சக்குளத்தில் தூா்வாரும் பணியின் போது, விதிகளை மீறி மண், கரம்பை எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு பயன்படும் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்பட்டிக்குளம், ஒட்டுக்குளம், மஞ்சக்குளம் உள்ளிட்ட பொதுப் பணித் துறைக்கு சொந்தமான குளங்களை தூா்வாரி வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறையினா் அனுமதி வழங்கினா். இதையடுத்து, இந்தக் குளங்களில் மண், கரம்பை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் குளங்களில் விதிமுறைகளை மீறி, மிக அதிகமாக பள்ளம் தோண்டி கரம்பை, வண்டல் மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதனால், மழைக் காலங்களில் குளத்தின் நீா்த்தேக்கத் திறன் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு நீா் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, விதிகளை மீறி மண் எடுப்போா், கண்காணிப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூடலூரில் நெகிழிப் புழக்கம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

விதிகளை மீறி கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 டிப்பா் லாரிகள் பறிமுதல்







