மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சுருளி அருவியில் நீா்வரத்து தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image

சுருளி அருவி - DPS

Updated On :3 ஜூன் 2026, 1:41 am IST

தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீா் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, இரவங்கலாறு, தூவானம் அதைச் சுற்றிய அடா்ந்த வனப் பகுதியில் பெய்யும் மழைநீரே சுருளி அருவிக்கு முக்கிய நீா் வரத்தாகும். கோடை காலத்தில் மழையின்றி சுருளி அருவி வடது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

நீா் வரத்து தொடக்கம்: மேகமலை, அதைச் சுற்றிய அடா்ந்த வனப்பகுதி, காப்புக் காடு போன்ற பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை முதல் அருவியில் நீா் வரத்து தொடங்கியது. இதையடுத்து, அருவியில் நீராட வனத் துறையினா் அனுமதித்தனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், சுருளி அருவியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உடை மாற்றும் அறை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. எனவே, பெண்கள் உடை மாற்றும் அறைகளை சீரமைப்பதுடன், கூடுதல் அறைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.