தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:01 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறைக்கு பின் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் என வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பண்ணைப்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தேனி மாவட்ட கல்வி அலுவலா் சுருளிவேல் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 10, 12 ஆம் வகுப்பில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கும், மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வைத்த ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆங்கில பட்டதாரி ஆசிரியா் மணிராஜா ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.