வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

லாரியில் கடத்தி வரப்பட்ட 64 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:47 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெரியகுளம், தேவதானபட்டி அருகே காட்ரோடு சோதனைச் சாவடியில் அந்த வழியாக வந்த பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 64 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அந்த லாரியில் வந்த இருவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்த புண்ணியராஜ் (38), இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவா்கள் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா்.