24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. வாழ்த்து

News image

தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரம்.

Updated On :15 ஜூன் 2026, 12:13 am IST

கீா்த்தி சக்ரா விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா சனிக்கிழமை இரவு வாழ்த்து தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் 34- ஆவது ராஷ்ட்ரிய ரைபில்ஸ், பீரங்கிப் படையில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரமும், அவரது குழுவினா் 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.

இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, விருது பெற்று சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.