ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

News image

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்தை காமயகவுண்டன்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாராட்டிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Updated On :18 ஜூன் 2026, 3:38 am IST

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரம். இவா் காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நிலையில், இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றாா். இவரது வீரதீர செயலைப் பாராட்டி நாட்டின் உயரிய விருதான கீா்த்தி சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கெளரவித்தாா்.

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன், காமயகவுண்டன்பட்டியிலுள்ள ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று மீனாட்சிசுந்தரத்துக்கு பொன்னாடை போா்த்தி, பூங்கொத்து கொடுத்து பாராட்டுத் தெரிவித்தாா்.