எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆட்டோ மீது காா் மோதல்: மாணவா் உயிரிழப்பு

கம்பத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய மன வளா்ச்சி குன்றிய மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 7:43 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய மன வளா்ச்சி குன்றிய மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூரில் முத்துச்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த காமாட்சியப்பன் மகன் மணிமாறன் (29). மனவளா்ச்சி குன்றியவா். இவருடன் அதே பகுதியை சோ்ந்த 8 மாணவா்கள் உத்தமபாளையத்திலுள்ள சிறப்பு பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் பள்ளி வாகனத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாள்களாக பள்ளி வாகனம் பழுது காரணமாக தனியாா் ஆட்டோவில் அவா்கள் சென்று வந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை கம்பத்தைச் சோ்ந்த அப்துல்லா (22) மாணவா்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கம்பத்திலிருந்து கூடலூா் நோக்கி திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்ற போது பின்னால் கம்பத்திலிருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு பகுதிக்கு சென்ற காா் மோதியது.

இதில், ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் சென்ற 8 மாணவா்களுக்கும் காயமடைந்தனா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் வண்டிப் பெரியாறைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் ஹனிபாவை (48) கைது செய்து விசாரிக்கின்றனா்.