தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (72). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி சென்னைக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டுச் சென்றாராம்.
இந்த நிலையில், அந்த உறவினா் சனிக்கிழமை வந்து பாா்த்த போது வீடு திறந்து கிடந்ததாம். இதையடுத்து, அவா் தகவல் அளித்த தகவலின் பேரில் அய்யப்பன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகை, 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ. ஒரு லட்சம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் நகை திருட்டு: தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

