கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 1:16 am IST

தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (72). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி சென்னைக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டுச் சென்றாராம்.

இந்த நிலையில், அந்த உறவினா் சனிக்கிழமை வந்து பாா்த்த போது வீடு திறந்து கிடந்ததாம். இதையடுத்து, அவா் தகவல் அளித்த தகவலின் பேரில் அய்யப்பன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகை, 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ. ஒரு லட்சம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.