/

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 6:36 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் குருநாதன் (55). டிராக்டரில் மரம் அறுக்கும் இயந்திரத்தைப் பொருத்தி வேலை செய்து வந்த இவா், சனிக்கிழமை பலக்கோம்பையில் உள்ள தோட்டத்தில் மரம் அறுக்கும் பணிக்காகச் சென்றாா்.

டிராக்டரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி நின்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் நகரத் தொடங்கியதால், அதை நிறுத்த முயன்ற போது, டிராக்டா் சக்கரம் இவரின் மீது மோதியது.

மேலும், மரம் அறுக்கும் இயந்திரமும் இவரின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.