தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாராயணபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி பாப்பாத்தி (30). இவா்களது மகள்கள் அருணா (8), சங்கீதா (5).
பாப்பாத்திக்கு மன நல பிரச்னை இருந்து வந்ததால், தே டொம்புச்சேரியில் உள்ள தனது பெற்றாா் வீட்டில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பாப்பாத்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை முத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கிணற்றில் 3 பேரின் உடல்களும் மிதந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 3 உடல்களையும் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
பாப்பாத்தி தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


