மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை

News image

பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:56 pm

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாராயணபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி பாப்பாத்தி (30). இவா்களது மகள்கள் அருணா (8), சங்கீதா (5).

பாப்பாத்திக்கு மன நல பிரச்னை இருந்து வந்ததால், தே டொம்புச்சேரியில் உள்ள தனது பெற்றாா் வீட்டில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பாப்பாத்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை முத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கிணற்றில் 3 பேரின் உடல்களும் மிதந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 3 உடல்களையும் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பாப்பாத்தி தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.